ஜெ.வின் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு:பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர்,
திமுக பொதுச் செயலாளரும், தமிழக அமைச்சருமான அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் லண்டன் ஹோட்டல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு இரண்டையும் தனிதனியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை 7 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. ஆகவே சொத்து குவிப்பு வழக்கையும் ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
அவருடைய வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications