நாடாளுமன்றத்தை அல்-கொய்தா தாக்க திட்டம்மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சுதந்திர தினத்தன்று நாடாளுமன்றத்தை அல்-கொய்தா தாக்கப் போவதாக மிரட்டல் வந்ததையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் தொடர்பாக மிண்டு குமார் மொகந்தோ என்ற 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு டெல்லி போலீசின் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஆகஸ்ட் 15ம் தேதியன்று நாடாளுமன்றத்தின் மீது அல்-கொய்தா அமைப்பு பயங்கர தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டினார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த மிரட்டல் தொடர்பாக மிண்டு குமார் மொகந்தோ என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தான் மிரட்டல் விடுத்தவன் என்று தெரிகிறது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட்டது.

விசாரணையில் விளையாட்டாக இந்த மிரட்டலை விடுத்ததாக மொகந்தோ தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+