தபால் நிலையத்தில் தலித்துகளுக்குத் தடைபெண் போஸ்ட் மாஸ்டர் கைது
கோவை:கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள திருமலையாம்பாளையம் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்திற்குள் தலித் சமூகத்தினரை அனுமதிக்க மறுத்து வந்த பெண் போஸ்ட் மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.
திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவர் அந்த ஊர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக உள்ளார். சுமதியின் வீட்டின் ஒரு பகுதியில்தான் அந்த தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தபால் நிலையத்திற்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அனுமதிக்காமல் தடுத்து வந்தார் சுமதி. தாழ்த்தப்பட்டவர்கள், வீட்டுக்கு வெளியே இருந்தபடிதான் ஸ்டாம்ப் போன்றவற்றை வாங்கிக் கொள்ள வேண்டுமாம்.
சுமதியின் இந்த அராஜகச் செயலைக் கண்டித்த பெரியார் திராவிடக் கழகத்தினர், சுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தபால் நிலையத்திற்குள் தலித்துகள் புகும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தது.
இந்த நிலையில், பாண்டியன் தெருவைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் மணி ஆர்டர் அனுப்ப தபால் நிலையத்திற்குச் சென்றார். அப்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே வரக் கூடாது என்று கூறி அவரை உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்துள்ளார்.
இதையடுத்து மதுக்கரை டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்தார் பாலமுரளி. அதன் பேரில் போலீஸார் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுமதியைக் கைது செய்தனர்.
அதேசமயம், சுமதியும் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாண்டியன் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் வந்து, ஒழுங்காக வேலை செய், இல்லாவிட்டால் கொளுத்தி விடுவோம் என மிரட்டிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரையும் ஏற்ற போலீஸார் அதன் பேரில், ராமலிங்கம், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் திருமலையாம்பாளையம் கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. இந்த 3 வேலைகளை முடிக்க ஒரே நாள்தான் இருக்கு! தமிழக அரசு அதிரடி -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்!












Click it and Unblock the Notifications