தபால் நிலையத்தில் தலித்துகளுக்குத் தடைபெண் போஸ்ட் மாஸ்டர் கைது
கோவை:கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள திருமலையாம்பாளையம் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்திற்குள் தலித் சமூகத்தினரை அனுமதிக்க மறுத்து வந்த பெண் போஸ்ட் மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.
திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவர் அந்த ஊர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக உள்ளார். சுமதியின் வீட்டின் ஒரு பகுதியில்தான் அந்த தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தபால் நிலையத்திற்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அனுமதிக்காமல் தடுத்து வந்தார் சுமதி. தாழ்த்தப்பட்டவர்கள், வீட்டுக்கு வெளியே இருந்தபடிதான் ஸ்டாம்ப் போன்றவற்றை வாங்கிக் கொள்ள வேண்டுமாம்.
சுமதியின் இந்த அராஜகச் செயலைக் கண்டித்த பெரியார் திராவிடக் கழகத்தினர், சுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தபால் நிலையத்திற்குள் தலித்துகள் புகும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தது.
இந்த நிலையில், பாண்டியன் தெருவைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் மணி ஆர்டர் அனுப்ப தபால் நிலையத்திற்குச் சென்றார். அப்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே வரக் கூடாது என்று கூறி அவரை உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்துள்ளார்.
இதையடுத்து மதுக்கரை டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்தார் பாலமுரளி. அதன் பேரில் போலீஸார் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுமதியைக் கைது செய்தனர்.
அதேசமயம், சுமதியும் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாண்டியன் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் வந்து, ஒழுங்காக வேலை செய், இல்லாவிட்டால் கொளுத்தி விடுவோம் என மிரட்டிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரையும் ஏற்ற போலீஸார் அதன் பேரில், ராமலிங்கம், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் திருமலையாம்பாளையம் கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications