அமைச்சரின் கார் டிரைவருக்கு அடி, உதைஅமைச்சரின் 2வது மனைவி காரணமா?
திண்டுக்கல்:வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் கார் டிரைவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சரின் 2வது மனைவி என்று கூறப்படும் பெண்மணி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் திண்டுக்கல்லில் பரபரப்பு நிலவுகிறது.
அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமியின் வீட்டுக்கு 8 பேர் ஒரு காரில் வந்தனர். காரை விட்டு இறங்கிய அவர்கள் வேகமாக அமைச்சரின் வீட்டுக்குள் செல்ல முயன்றனர்.
அப்போது அமைச்சரின் கார் டிரைவர் கண்ணன் அவர்களைத் தடுத்துள்ளார். அப்போது அந்தக் குழுவில் இருந்த ராஜலட்சுமி பெண்மணி, நான் யார் தெரியுமா, அமைச்சரின் 2வது மனைவி. என்னையே தடுக்கிறாயா என்று கோபத்துடன் கூறியபடி கண்ணனை அடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருடன் வந்தவர்களும் சரமாரியாக கண்ணனை அடித்துள்ளனர்.
இதில் கண்ணன் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்மணி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வேறு ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது டிரைவர் கண்ணன், அமைச்சர் பெயரைச் சொல்லி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டாராம்.
இதையடுத்து ஆத்திரமடைந்த பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அமைச்சர் வீட்டுக்குச் சென்று அவரிடம் முறையிட்டனராம். அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர், கண்ணனிடம் விசாரிப்பதாக கூறியுள்ளார்.
பின்னர் வெளியே அவர்கள் வந்தபோது எதிரே கண்ணன் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கண்ணனை அடித்து உதைத்ததாக அந்த இன்னொரு செய்தி கூறுகிறது.
இதில் எது உண்மை, என்ன நடந்தது என்பது தெரியவில்லை. காவல்துறை தரப்பில் இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் தனது 2வது மனைவி வந்து தகராறு செய்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது எனது பெயரை களங்கப்படுத்தும் செயல். டிரைவர் தாக்கப்பட்டது உண்மை. ஆனால் எதற்காக தாக்கப்பட்டார் என்று தெரியவில்லை என்று அமைச்சர் பெரியசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications