மைனர் பெண்கள் காதலிக்கதடை இல்லை - டெல்லி கோர்ட் தீர்ப்பு
கோவை:தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால், கோவை மாநகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தனி நீதிமன்றம், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தீர்ப்பு வழங்கவுள்ளது. மும்பை தடா நீதிமன்ற பாணியில் முதலில் குற்றவாளிகள் யார் என்பது அறிவிக்கப்பட்டு பின்னர் அவர்களுக்குப் படிப்படியாக தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தீர்ப்பு வரவுள்ளதால் கோவை நகரில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனி நீதிமன்றத்தில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து அழிக்கும் நிபுணர் படை நிறுத்தப்பட்டுள்ளது. ஆயுதப் படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனி நீதிமன்றத்தின் வழியாக அல்லது அதை நோக்கிச் செல்லும் சாலைகளான வ.உ.சி. சாலை, நஞ்சப்பா சாலை, சிட்டி கிளப் சாலை ஏடிடி காலனி ஆகிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்படும் நாளில் இந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
நகரின் முக்கியமான 11 எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பாதைகள் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்படும்.
மேலும் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேர போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய 30 இடங்களில் போலீஸார் குவிக்கப்படுகிறார்கள். சைக்கிள் முதல் ஜீப் வரை பல்வேறு வகையான வாகனங்களில் போலீஸார் ரோந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications