கற்பழிக்க முயன்ற தந்தையை அம்மிக் கல்லால்அடித்து கொன்ற மகள்
மதுரை:பெற்ற தந்தையே கற்பழிக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த மகள் அம்மிக் கல்லால் தந்தையை தலையில் அடித்தும், கோடாரியால் வெட்டியும் கொலை செய்தார்.
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் சுப்புத் தேவர். கூலித் தொழிலாளியான இவர் எப்போதும் குடிபோதையில்தான் இருப்பார்.
இவருக்கு முத்தாலம்மா என்ற மனைவியும், மாலா என்ற மகளும் உள்ளனர்.
![]() |
மாலா தனது கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந் நிலையில் இரவு மாலா வீட்டுக்குள்ளும், தாயும், தந்தையும் வீட்டுக்கு வெளியிலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் எழுந்த சுப்புத் தேவர், மகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தார். மகள் என்றும் பாராமல் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த மாலா, அருகே இருந்த அம்மிக் கல்லை எடுத்துத் தந்தையின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
அப்படியும் ஆத்திரம் தீராமல் கோடாரியை எடுத்து சரமாரியாக வெட்டித் தள்ளினார். இதில் ரத்த வெள்ளத்தில் சுப்புத் தேவர் பிணமானார்.
பின்னர் தந்தையின் உடலை கட்டிலில் போட்டு விட்டு படுத்துக் ெகாண்டார்.
மறு நாள் காலை எழுந்த முத்தாலம்மா, கணவர் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். போலீஸாருக்குத் தகவல் போனது.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் துப்பறியும் நாய், மாலாவிடம் போய் நின்று அவரது சேலையைக் கவ்வியது.
இதையடுத்து மாலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் உண்மையைக் கூறி கதறி அழுதார்.
3 மாதத்திற்கு முன்பே சுப்புத் தேவர் மாலாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளார் மாலா. ஆனால் முத்தாலம்மா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.
மாலாைவப் போலீஸார் கைது செய்து, சுப்புத் தேவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
வேலூர், ராணிப்பேட்டைக்கு ஹை அலர்ட்! உஷாரா இருங்க மக்களே! வானிலை மையம் வார்னிங் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ்













Click it and Unblock the Notifications