கோவில் காவலாளியை கொன்று பஞ்சலோக சிலைகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவில் காவலாளியைக் கொலை செய்த கும்பல் கோவிலில் இருந்த 3 பஞ்சலோக சிலைகளை திருடிச் சென்றது.
சிசம்பரம் அருகே உள்ளது பூதங்குடி கிராமம். இக்கிராமத்தில் உள்ள தைபையிந்த நாச்சியார் கோவிலில் காவலாளியாக இருந்தவர் குருசாமி (60). நேற்று இரவு இந்தக் கோவிலுக்கு வந்த ஒரு கும்பல் குருசாமியை கழுத்தை நெரித்துக் கொன்றது.
பின்னர் கோவிலில் இருந்த பஞ்சலோகத்தால் ஆன ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை திருடிச் சென்றது.
இந்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து அக்கும்பலை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications