மாறுதல் கேட்கும் நரேஷ் குப்தா:தேர்தல் கமிஷன் பதவிக்கு கும்பிடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா தன்னை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிடுமாறு கோரியிருக்கிறார்.
நேர்மையான அதிகாரியான குப்தா திமுக, அதிமுக என இருபுறமும் மத்தள அடி வாங்கி வருகிறார்.
![]() |
குறிப்பாக மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது இவர் காட்டிய கெடுபிடியில் அஞ்சா நெஞ்சன் அழகிரியே ஆடிப் போனார்.
இவர் அதிமுக சார்பானவராக இருப்பதாக திமுகவினரால் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து மதுரையில் வென்ற கையோடு இவரது வீட்டுக்கு அருகே அழகிரியின் பேனரை வைத்து டென்சன் தந்தனர் திமுகவினர்.
உள்துறைச் செயலாளராக இருந்து இந்தப் பதவிக்கு வந்த குப்தாவால் தேர்தல் கமிஷன் டென்சனைத் தாங்க முடியவில்லை என்று தெரிகிறது. தனக்கு அரசியல் சாயம் பூசப்படுவதால் வெறுத்துப் போயிருக்கும் குப்தா தன்னை இந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்துவிடுமாறு கேட்டுள்ளாராம்.
இது தொடர்பாக மாநில அரசுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பிவிட்டார் குப்தா.













Click it and Unblock the Notifications