ரயில் மறியல்-மத்திய அரசு தலையிட கேரள எம்பி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஓணம் பண்டிகை நடக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் கேரள ரயில்களை மறிக்கும் பேராட்டம் நடப்பதைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என கேரள எம்பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இன்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் இந்தப் பிரச்சனையை கிளப்பினார் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பியான சுரேஷ் குருப். அவர் பேசுகையில்,
இந்த ரயில் மறியல் போராட்டத்தால் கேரளத்தில் இருந்தும் கேரளாவுக்கும் செல்லும் ரயில்கள் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் ஓணம் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுவர்.
எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலையிட்டு தமிழகத்துடன் பேசி ரயில் மறியலை கைவிடச் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications