சேலத்தில் திமுக-பாமகவினர் நடுரோட்டில் அடிதடிபஸ்கள் சேதம், கடைகள் அடைப்பு
சேலம்:சேலம் அருகே இடைப்பாடியில் திமுக, பாமக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு அந்த வழியே வந்த பஸ்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த அடிதடியில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அடுத்த மாதம் தமிழக முதல்வர் கருணாநிதியும் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் இடைப்பாடிக்கு வரவுள்ளனர். இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரு வேறு தேதிகளில் அங்கு வருகின்றனர்.
இதையொட்டி தங்களது தலைவர்களை வரவேற்க சுவர்களில் வரவேற்பு விளம்பரங்கள் எழுதி வருகின்றனர் திமுகவினரும் பாமகவினரும்.
பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சிப் பள்ளி கம்பவுண்ட் சுவரில் விளம்பரம் எழுத இரு தரப்பும் இடம் பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் அடிதடியும் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி அடித்துக் ெகாண்ட தொண்டர்களில் பலருக்கு சட்டை, வேஷ்டிகள் கிழிந்தன. இந்த மோதலால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அவ்வழியே வந்த பஸ்களின் கண்ணாடிகளையும் இக் கும்பல் உடைத்தது.
காயமடைந்த பா.ம.கவினர் சேலம் அரசு மருத்துவமனையிலும், திமுகவினர் இடைப்பாடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
சேலம் பகுதியில் ஏற்கனவே பாமகவினருக்கும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந் நிலையில் அந்த மோதல் இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications