செப். 14ல் முக்கிய முடிவு!: விஜய்காந்த்
சென்னை:புதுக்கோட்டையில் வரும் செப்டம்பர் 14ம் தேதி நடக்கவிருக்கும் தேமுதிகவின் மாநாட்டில் எதிர்கால அரசியல் குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாளை (25ம் தேதி) விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அதில் விஜயகாந்த் கூறியதாவது,
ஏழை மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும், வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நான் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுகிறேன். இதுவரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஏழை பெண்களுக்கு 1,500 தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளேன்.
நான் நடிக்கும் 150வது படத்திற்கு எம்ஜிஆர் என்ற பெயரை வைக்க நினைத்திருந்தேன். ஆனால் வேறொரு நடிகர் அந்தப் பெயரை பதிவு செய்து வைத்திருக்கிறார். சர்க்கார் என்று பெயர் வைக்க யோசனை சொன்னார்கள். ஆனால் தேவையில்லாமல் சர்ச்சைகள் உண்டாகும் என்பதால் அரசாங்கம் என்று வைத்துள்ளேன். அதற்கு யார் என்னை வம்புக்கு இழுக்க போகிறார்களோ தெரியவில்லை.
நான் எனது திருமண மண்டபத்தை இடிக்காமல் இருக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை தமிழக அரசிடம் அனுமதி கேட்டேன். அதுவரை இடிக்காமல் இருந்தால் பாலம் கட்டும் வேலை மிகவும் தாமதமாகிவிடும் என்று சொல்லி அவசர அவசரமாக இடித்து விட்டார்கள்.
இடித்தது சரிதான். ஆனால் இதுநாள் வரை பாலம் வேலை நடந்ததா இல்லை. இதெல்லாம் கேட்டால் எனக்கு அரசியல் தெரியாது என்று கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். எனக்கு தெரிந்த அரசியலைப் பற்றி தேமுதிகவின் வளர்ச்சி சொல்லும்.
வரும் செப்டம்பர் 14ம் தேதி புதுக்கோட்டையில் தேமுதிகவின் மூன்றாம் ஆண்டு மாநாடு நடக்கவுள்ளது. அப்போது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
வெறும் கவர்ச்சித் திட்டங்களையே நம்பும் அரசுகளால் வறுமையை கண்டிப்பாக ஒழிக்க முடியாது. வறுமை ஓழிப்பு இயக்கம் தமிழ்நாட்டில் மக்கள் இயக்கமாக மாறினால் தான் வறுமை ஒழியும்.
லஞ்சம், ஊழல் இல்லாத கொள்கை அடிப்படையிலான ஒரு புதிய அரசியலைத் தருவதே எனது நோக்கமாகும் என்று விஜயகாந்த் கூறினார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications