மான் வேட்டை: சல்மான் கானுக்கு 5 வருட சிறை உறுதியானது
ஜோத்பூர் (ராஜஸ்தான்):சிங்காரா ரக மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் உடனடியாக அவர் கோர்ட்டில் சரணடையுமாறும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சல்மான் கான் சிறையில் அடைக்கப்படுகிறார்.
![]() |
1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹைன் என்ற படத்தின் சூட்டிங்குக்காக ராஜஸ்தான் வந்த காட்டுப் பகுதியில் வேட்டையில் இறங்கினார் சல்மான். அரிய ரக மான்களை அவர் வேட்டையாடி கொன்றார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு அவருக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சல்மான் கைது செய்யப்பட்டு 3 நாட்கள் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சல்மான் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அப்போது சல்மான் கானின் அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்தது. அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அப்பீல் மனு மீதான தீர்ப்பு அளிக்கப்பட்டபோது சல்மான் கான் கோர்ட்டுக்கு வரவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்.
இருப்பினும் நாளையும், நாளை மறுநாளும் உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் ஜாமீன் கோரிக் கூட மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் சல்மான் கான் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்படுவார் அல்லது அவரே நீதிமன்றத்தில் சரணடையலாம்.
சமீபத்தில்தான் சஞ்சய் தத்துக்கு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் நேற்றுதான் இடைக்கால ஜாமீனில் விடுதலையாகி வந்தார். இந்த நிலையில் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான் தற்போது நடித்து வரும் போக்கிரி ரீமேக் உள்ளிட்ட பல படங்கள் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!













Click it and Unblock the Notifications