சேலம், கோவை, நெல்லையில் நாளை முதல்கேரள ரயில்கள் மறியல்
சேலம்&கோவை:சேலம் ரயில்வே கோட்டத்தை திட்டமிட்டபடி 14ம் தேதி துவங்க வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில் நாளை காலை முதல் கேரள ரயில்களை மறிக்கும் காலவரையற்ற பேராட்டத்தை நடத்துவது என கோவையில் நேற்றிரவு நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்து சேலம், நெல்லையிலும் நாளை கேரள ரயில்களை மறிக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக நாளை (25ம் தேதி) காலை முதல் சேலம் வழியாக செல்லும் அனைத்து கேரள ரயில்களும் மறிக்கப்படும், இரவிலும் இந்தப் பேராட்டம் நடக்கும் என வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தார்.
கோவையில் காலவரையற்ற போராட்டம்:
இந் நிலையில் பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் சர்வக் கட்சி கூட்டம் கோவையில் நடைபெற்றது.
அதில், சேலம் ரயில்வே கோட்டத்தை திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை காலை கோவையிலும் அனைத்து கட்சி சார்பில் முதல் காலவரையறையற்ற கேரள ரயில்களை மறிக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெல்லையிலும் ரயில் மறியல்:
அதே போல நெல்லையிலும் ரயில்களை மறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர் சுப. சீதாராமன் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது,
சேலம் ரயில்வே கோட்டம் அமையவிருப்பதை கேரள முதல்வரும் அங்குள்ள அமைச்சர்களும் தடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
மத்திய ரயில்வே அமைச்சர் லாலுவும், இணை அமைச்சர் வேலுவும் தமிழ்நாட்டில் ஒரு மாதிரியாகவும், கேரள முதல்வர் மற்றும் அம்மாநில எம்பிக்களிடம் வேறு மாதிரியாகவும் பேசி நம்மை குழப்பி வருகிறார்கள்.
இரட்டை நாக்கு படைத்த லாலுவையும், கேரள முதல்வர் அச்சுதானந்தனையும் கண்டித்து சென்னையில் இருந்து நெல்லை வழியாக கேரளா செல்லும் அனைத்து ரயில்களையும் தடுத்து மறியல் செய்வோம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஓணம்-பாதிக்கப்படும் கேரள மக்கள்:
பல வெளிமாநிலங்களில் இருக்கும் கேரள மக்கள் தங்களுடைய ஓணம் பண்டிகைக்காக கேரளாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் நாளை நடக்கவுள்ள ரயில் மறியல் போராட்டத்தால் ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கண்டிப்பாக கேரள பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.
கேரள ரயில்கள் ரத்தாகுமா?:
இதற்கிடையே நாளை சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலியில் நடத்தப்படும் ரயில் மறியலால் அந்த வழியாக கேரளாவிற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.
அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து போராட்டம் நடத்துவதால், பொது மக்களின் பாதுகாப்பு கருதி சேலம் வழியாக செல்லும் கேரள ரயில்களை ரத்து செய்வதா என்று ரயில்வேத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
இதனால் நாளை பகல் நேரங்களில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு புறப்படும் ரயில்கள் மற்றும் திருவனந்தபுரம், மங்களூர், கன்னியாகுமரி, ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications