திரும்பி வருகிறார் நவாஸ் ஷெரீப்:முஷாரப்புக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பம்
இஸ்லாமாபாத்:அதிபர் பர்வேஸ் முஷாரபின் மிரட்டலையும் மீறி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த முஷாரப் ஷெரீப்பை குடும்பத்தோடு சிறையில் அடைத்தார். இதையடுத்து செளதி அரபியாவின் தலையீட்டால் ஷெரீபுக்கு விடுதலை கிடைத்தது.
இதையடுத்து நாடு கடத்தப்பட்ட ஷெரீபுக்கு செளதி அரசு தான் அடைக்கலம் தந்தது.
இப்போது அங்கு வசித்து வரும் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளார்.
சமீபகாலமாக ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ள முஷாரப், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுடன் கைகோர்க்க முடிவு செய்தார்.
ஆனால், அவருடன் கைகோர்த்தால் தனது அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதால் புட்டோ ஒதுங்கிவிட்டார்.
இந் நிலையில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கும் முஷாரபுக்கும் ேமாதல் ஏற்பட்டது.
முஷாரப் நீக்கிய தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியை மீண்டும் பதவியில் நியமித்தது உச்ச நீதிமன்றம். அதை தடுக்க முஷாரபால் முடியவில்லை.
இந் நிலையில் தன்னை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அவரை நாடு திரும்ப அனுமதித்தார்.
மேலும் ஷெரீப் நாடு திரும்புவதைத் தடுக்க முஷாரபுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நாடு திரும்ப ஷெரீப் தயாராகி வருகிறார். ஆனால், மீண்டும் நாட்டுக்குள் வரக் கூடாது, அரசியலில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஷெரீபுக்கு மன்னிப்பும் விடுதலையும் தரப்பட்டது.
அதை மீறி நாட்டுக்குள் நுழைந்தால் அந்த பொது மன்னிப்பு ரத்தாகிவிடும். மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என முஷாரப் அரசு ஷெரீப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், மாறிவிட்ட உலகச் சூழலில் ஷெரீப்பை முஷாரப் மீண்டும் கைது செய்வதை அமெரிக்காவால் அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.
தான் கைதானால் அமெரிக்காவின் பெயர் கெடும் என்ற நம்பிக்கையோடு சில நாட்களில் மீண்டும் பாகிஸ்தானில் நுழைய திட்டமிட்டுள்ளார் ஷெரீப்.
பாகிஸ்தானில் நடந்து வரும் சர்வாதிகார ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றும் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
நவாஸின் வருகையை அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் பாகிஸ்தானில் இனிப்பு வழங்கி கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications