முன்னாள் காங்கிரஸ் எம்.பி மீது வழக்கு!
Subscribe to Oneindia Tamil
தென்காசி:வழக்கறிஞரை மிரட்டிய முன்னாள் காங்கிரஸ் எம்.பி மீது தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தென்காசி அருகேயுள்ள ராமசந்திரன் பட்டிணம் பகுதியைச் சேர்நதவர் எஸ்.கே.டி ராமசந்திரன். இவர் ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர்.
இவருக்கும் தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் அமுத தமிழ் பாண்டியன் குடும்பத்தினருக்கும் சில காலமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் தென்காசி நீதிமன்றத்திற்கு வந்திருந்த எஸ்.கே.டி.ராமச்சந்திரன், வழக்கறிஞர் அமுத தமிழ் பாண்டியனை மிரட்டியுள்ளார்.
தன்னை மிரட்டிய முன்னாள் எம்பி மீது அமுததமிழ் பாண்டியன் தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் முன்னாள் எம்.பி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications