ரீ-டெயில் ஸ்டோர்களுக்கு மாயாவதி தடா:10 ஸ்டோர்களை மூடியது ரிலையன்ஸ்
லக்னெள:உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய ரீ-டெயில் ஸ்டோர்களை மூட முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் தனது 10 கடைகளை மூடியுள்ளது.
இந்த ரீ-டெயில் கடைகளால் சிறு வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி இந்த உத்தரவை மாயாவதி பிறப்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் சிறு வியாபாரிகள் லக்னெளவில் ரிலையன்ஸ் பிரஷ் மற்றும் ஸ்பென்சர் ஸ்டோர் ஆகிய கடைகளை சூறையாடினர்.
இந் நிலையில் மாயாவதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகளுக்குப் பொறுந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மிகப் பெரிய நிறுவனங்கள் ரீ-டெயில் விற்பனையில் குதித்துள்ளன. இதனால் பிளாட்பார கடைகளை விட குறைவான விலையில் தரமான காய்கறிகள், பொருட்கள் வாங்க முடிகிறது.
தமிழக மக்களிடையிலும் இந்தக் கடைகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், இந்தக் கடைகளை சிறு வியாபாரிகள் எதிர்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications