ஊராட்சி தலைவர்களை தடுக்கும் சக்திகள்மீது மிசா சட்டம் பாயும்: ஸ்டாலின்
விருதுநகர்:ஊராட்சித் தலைவர்களை செயல்பட விடாமல் தடுக்கும் ஆதிக்க சக்திகள் மீது மிசா சட்டம் பாயும் என உள்ளட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
தென் மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கான மண்டல மாநாடு விருதுநகரில் நடந்தது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன், அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், சுப.தங்கவேலன், தங்கம் தென்னரசு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறையே ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊராட்சிகளுக்கான அதிகாரங்களை, சலுகைகளை உடனே வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
காசோலைகளில் கையெழுத்து இடும் அதிகாரம் உங்களுக்கு உரியது. அதை தட்டி பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஜனாதிபதி, முதல்வருக்கு கூட கிடையாது. கையெழுத்து இடுவதில் பிரச்சனை ஏற்பட்டால் கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அல்லது கவுன்சில் கூட்டத்தை கூட்டி திர்த்து கொள்ளலாம்.
ஊராட்சித் தலைவர்களை செயல்படாமல் தடுக்கும் ஆதிக்க சக்திகள் மீது மிசா சட்டம் பாயும். அதற்கான உத்தரவை முதல்வர் வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications