தலைமை ஆசிரியர் அடித்ததில் மாணவன் சாவு?
தூத்துக்குடி:ஆசிரியர் அடித்ததால் 9ம் வகுப்பு மாணவன் இறந்து விட்டதாக கூறி அவரது அண்ணன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யூ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேல் ஆசாரி மகன் கோபால கிருஷ்ணன். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி முதல் அவன் பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் விசாரித்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் அடித்ததால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினானாம்.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனின் உடல் நலம் மோசமடைந்தது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சையளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் இறந்து விட்டான். இதையடுத்து தலைமை ஆசிரியர் அடித்ததால்தான் தனது தம்பி இறந்து விட்டதாக கூறி அவனது அண்ணன் பேச்சிமுத்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications