திருட வந்த இடத்தில் பணம் சிக்காததால்மது பாட்டில்களை எரித்த திருடர்கள்!
சென்னை:அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்) திருட வந்த திருடர்கள், அங்கு பணம் எதுவும் கிடைக்காததால் மது பாட்டில்களை தீவைத்து எரித்து விட்டு சென்றுள்ளனர்.
சென்னை அருகே உள்ளது பெரியபாளையம். இங்குள்ள பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கடையைத் திறக்க வந்தனர் கடையின் விற்பனையாளர் பரமசிவம் மற்றும் மேற்பார்வையாளர் வெங்கடேசன்.
அப்போது கடையின் மேற் கூரை துளையிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடைக்குள் பார்த்தபோது மது பாட்டில்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மொத்தம் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருட்டுக் கும்பல் எரித்துள்ளது. 2 ஆயிரத்து 544 பாட்டில்கள் தீயில் காலியாகி விட்டன.
திருட வந்த வந்த இடத்தில் பணம் இல்லாததால் கடுப்பான திருடர்கள், மது பாட்டில்களை எரித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications