பொறியியல் கல்லூரிகளில் 90% மாணவர்களிடம்சரியான கட்டணமே வசூல்: பொன்முடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு கோட்டாவின் கீழ் சேர்க்கப்பட்ட 90 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த தொகை தான் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் பல கல்லூரிகளிலும் நடத்தப்பட்ட ரெய்டுகள் மூலம் தெரியவந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த ரெய்டுகள் தொடரும். மாணவர்களை பிழிந்து பணம் பிடுங்குவதை அனுமதிக்க மாட்டோம். இந்த ஆண்டு 100 சதவீதம் அளவுக்கு முறைகேடுகளை தடுக்க முடியவில்லை.
தவறு செய்த கல்லூரிகளுக்கு எதிராக ஆதாரங்கள் திரப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து அந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் ேகாரி அகில இந்திய ெதாழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு தமிழக அரசு நிச்சயம் பரிந்துரை செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications