வேலூர் மாணவிக்கு 5 நாள் போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஹைத
ராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வேலூரில் படித்து வந்த வங்கதேச மாணவியான ரப்சஞ்சானிக்கு 5 நாள் போலீஸ் காவல் கொடுத்து ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த 25ம் தேதி நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 44 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வேலூரில் தங்கிப் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது சகோதரர் ரிஸ்வான் காஜியும் பெங்களூரில் கைதாகியுள்ளார்.
இந்த நிலையில் ரப்சஞ்சானியை நேற்று நீதிமன்றத்தில் ஆந்திர போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் 5 நாள் காவலில் ரப்சஞ்சானியை அனுமதித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications