மலையில் லாரி உருண்டு 4 பேர் பலி
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலையில் வெள்ளைப் பூண்டு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து உருண்டதில் வியபாரிகள் 4 பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில் வெள்ளைப் பூண்டு மார்க்கெட் உள்ளது. ஞாயிறுதோறும் இங்கு வியாபாரம் நடைபெறும்.
இதற்காக கொடைக்கானலில் இருந்து வியபாரிகள் பலர் வெள்ளைப் பூண்டுடன் இன்று அதிகாலை வடுகப்பட்டி நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
லாரியில் 9 வியபாரிகள் இருந்தனர். டம்டம் பாறை என்ற இடத்தில் லாரி வந்தபோது திடீரென தறி கெட்டு ஓடியது. பின்னர் 200 அடிப் பள்ளத்தில் லாரி விழுந்தது. இதில் பழனிச்சாமி (55), குப்புச்சாமி (25), சண்முகம் (40) மற்றும் சிவமுருகன் (44) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து போராடிக் கொண்டிருந்த லாரி டிரைவர் உட்பட 6 பேரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.