சாலை விபத்தில் கான்ட்ராக்டர், டிரைவர் பலி

Subscribe to Oneindia Tamil


கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டிட கான்ட்ராக்டர் மற்றும் அவரது கார் டிரைவர் பலியாகினர்.

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் அருகே ஐஸ்வர்யா கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு இவர் தொழில் நிமித்தமாக தனது நண்பர் சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முருகன் என்பவருடன் காரில் திருப்பூருக்கு சென்றார். காரை பழையகாயல் இமாம்சாயி மரைக்காயர் மகன் முகமது நயினார் என்பவர் ஓட்டினார்.

திருப்பூரில் வேலையை முடித்துவிட்டு அவர்கள் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரை மெயின் ரோட்டில் வந்தபோது எதிரே வந்த ஒரு வாகனம் கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் காரில் இருந்த சிதம்பரம் மற்றும் டிரைவர் முகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். முருகன் படுகாயம் அடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+