அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் - சோனியா திடீர் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேசத்தின் வளர்ச்சியைத் தடுப்பவர்கள், தேசத்திற்கு துரோகம் செய்பவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காட்டமாக கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜார் என்ற இடத்தில் ரூ. 7892 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள இந்திரா காந்தி சூப்பர் அணல் மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சோனியா காந்தி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதனால்தான் அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Nuclear Deal

ஆனால் அணு சக்தி ஒப்பந்தத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும், அது கூடாது என்று சிலர் கூறி வருகிறார்கள். அதை எதிர்க்கிறார்கள். அப்படிச் செய்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் எதிரிகள். இந்த நாட்டின் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் இப்படி எதிர்பப்பார்கள். இது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும்.

இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று காட்டமாக கூறினார் சோனியா காந்தி.

அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் இடதுசாரிக் கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் தேச துரோகிகள் என சோனியா காந்தி விமர்சித்துள்ளது இடதுசாரிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+