தீபாவளி: பருப்பு-எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
சென்னை:
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பருப்புகள் மற்றும் பாமாயில் உள்ளிட்ட எண்ெணய்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு 100 கிலோ எடை கொண்ட மூடை ரூ. 4,000க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரூ. 4,300ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 100 கிலோ எடை கொண்ட ரூ. 3,300க்கு விற்கபட்ட கடலைபருப்பு மூடை தற்போது ரூ. 3,400யைத் தொட்டுள்ளது.
பாமாயில் ஒரு கிலோ ரூ. 45க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 48ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாமாயிலுக்கு கடும் தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதுக்கலே காரணம் எனக் கருதப்படுகிறது. பதுக்கலால் டிமாண்ட் அதிகமாகும், அப்போது விலையை மேலும் உயர்த்தலாம் என்ற நல்ல எண்ணத்தில் சில மொத்த வியாபாரிகள் பாமாயில் பதுக்கலில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல ரூ.60க்கு விற்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ரூ.64 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications