செளதி, சூடானில் புனிதப் போர்: லேடன் அழைப்பு
துபாய்: அரேபியா, சூடானில் புனிதப் போர் நடத்த தீவிரவாதிகள் அனைவரும் தயாராக வேண்டும் என அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் அழைத்துள்ளார்.
சமீபத்தில்தான் ஈராக்கில் புனிதப் போர் நடத்த முஸ்லீம்கள் அனைவரும் திரள வேண்டும். உலகெங்கிலும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஈராக்கில் புனிதப் போர் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார் லேடன்.
இந்த நிலையில் பின் லேடன் மறுபடியும் ஒரு ஆடியோ உரையை வெளியிட்டுள்ளார். இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த ஆடியோ உரையில், சூடான் மற்றும் அரேபியக் கண்டத்தில் ஆக்கிரமித்திருக்கும் வெளிநாட்டுப் படைகளுக்கு எதிராக புனிதப் போர் நடத்த வேண்டும்.
இது முஸ்லீம்கள் அனைவரின் கடமையும் ஆகும். நமது மண்ணை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று அதில் பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும் இந்தக் குரலுக்குரியவர் பின் லேடன்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications