தகாத உறவு-மருமகளுக்கு கொடுமை தந்த மாமனார் கைது

Subscribe to Oneindia Tamil

மேலூர்: மருமகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததோடு செக்ஸ் உறவுக்கும் அழைத்த மாமனார் கைது செய்யப்பட்டார்

மதுரையையடுத்து மேலூர் அருகே உள்ள தாமரைபட்டியை சேர்ந்தவர் ஜோதி (வயது 27). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் நாகமங்கலத்தைச் சேர்ந்த மூர்த்தி (35) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் மனைவியிடம் மேலும் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி மூர்த்தி சித்ரவதை செய்துவந்தார்.

மேலும் ஜோதியின் மாமனார் சுந்தரராஜும் (வயது 60) வரதட்சணை கேட்டதுடன் அவரை தகாத உறவுக்கும் அழைத்ததாகக் கூறப்படுகிறது.

பல காலமாய் தொடர்ந்த இந்த வேதனைகளை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜோதி அதற்கு மேல் கொடுமைகளை சமாளிக்க முடியாமல் சமீபத்தில் மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் மாமனார் சுந்தரராஜ், கணவர் மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+