மாணவியை கட்டிப்பிடித்து சில்மிஷம்-யோகா ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தன்னிடம் யோகா கற்க வந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த தேவி (வயது 18) தனியார் பெண்கள் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.
இவர் பெரம்பூர் திரு.வி.க. நகரில் உள்ள யோகா பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார். இவரது யோகா ஆசிரியர் தாகீர் (வயது 45).
சில நாட்களுக்கு முன் தேவி மட்டும் யோகா பள்ளிக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தனியே இருந்த தேவியை தாகீர் பின்பக்கமாக வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
இதையடுத்து அவரை மானபங்கம் செய்யவும் முயன்றார். அங்கிருந்து தப்பிய தேவி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராமை சந்தித்து புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து யோகா ஆசிரியர் தாகீரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications