அமெரிக்கா, ஈரானில் நிலநடுக்கம்
ஈரான்: அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், ஈரான் நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று காலை இந்திய நேரப்படி 10.50 மணிக்கு ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள காலே-டால் என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கசகஸ்தான் நாட்டின் எல்லையருகில் உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த பகுதியில் ஏராளமான பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் நிலநடுக்கம்:
அமெரிக்காவின் ஒரெகன் மாகாணத்தில் உள்ள பண்டன் என்ற இடத்திலிருந்து வடமேற்கு திசையில் 257 கிமீ தொலைவில் கடலுக்கடியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் அந்த மாகாணத்தின் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின.
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
கடந்த வாரம் கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications