அரசின் வேண்டுகோளை ஏற்று வேளாண் மாணவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
கோவை: வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டிருந்த காலவரையற்ற ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசின் விவசாயத் துறை, விவசாய பொறியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த புதன்கிழமை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாணவர்கள், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதையடுத்து பல்கலைக்கழகம், கல்லூரிகள் மூடப்பட்டன. விடுதிகளும் மூடப்பட்டன. இருப்பினும் பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவ, மாணவியர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உண்ணாவிரதம் இருந்த பல மாணவ, மாணவியர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறை செயலாளர், நிதித்துறைச் செயலாளர், வேளாண்துறை இயக்குநர் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, வேளாண் மாணவர்களின் 11 கேரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாணவ, மாணவியர் முன்வைத்த 11 கோரிக்கைகளில் பெரிய முரண்பாடுகளோ, கருத்து மாறுபாடுகளோ அரசுத் தரப்பில் கிடையாது.
மாணவர்களின் பிரதிநிதிகள் துறையின் அமைச்சரையோ, அதிகாரிகளையோ உடனடியாக சந்தித்துப் பேசி நல்ல முடிவுகளை எடுப்பதில் எந்தவிதமான சிரமமும் இல்லை என்பதால் வேளாண் மாணவர்கள் தங்களது போராட்டத்தினை உடனடியாக நிறுத்திக் கொண்டு படிப்பைத் தொடருவதோடு தங்களின் கோரிக்கைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள வழி வகை காணலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.
அரசின் இந்த வேண்டுகோள் குறித்து கோவை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அரசின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொள்ள அவர்கள் முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகலில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications