ஈரோடு, திருப்பூர் நகராட்சி தலைவர்கள் மேயர்களாக செயல்பட இடைக்கால தடை
சென்னை: மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஈரோடு மற்றும் திருப்பூர் நகராட்சிகளின் தலைவர்கள் மேயர்களாக செயல்படுவதற்கு வழி வகுக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஈரோடு மற்றும் திருப்பூர் நகராட்சிகள் சமீபத்தில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதுதொடர்பாக கடந்த மாதம் 17ம் தேதி தமிழக அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.
அதன்படி, நகராட்சித் தலைவர்களை மேயர்களாக செயல்பட அனுமதிக்க வழி வகுக்கப்பட்டது. இதை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தில் திருப்பூர் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளை மாநகராட்சி பிரதிநிதிகளாக மாற்ற வழி செய்யப்பட்டுள்ளது.
மறைமுகமாக கொள்ளைப்புறம் வழியாக மாநகராட்சிப் பிரதிநிதிகளாக மாற்ற இந்த புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள மக்கள் தொகை, பொருளாதார நிலை ஆகியவற்றை கணக்கில் வைத்து மாநகராட்சியாக மாற்ற முடிவெடுத்து அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
மேலும், திருப்பூர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோர் முறையே மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களாக செயல்படுவார்கள் எனவும் அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமானாகும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரண்பாடானதாகும். நகராட்சி, தரம் உயர்த்தப்படும்போது அதைக் கலைத்து விட்டு தனி அதிகாரிகளைத்தான் நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
எனவே அவசரச் சட்டத்தின் 9(9) பிரிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதேபோல ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.ஆர்.சுப்ரமணியம் என்பவரும் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த இரு மனுக்களும் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து புதன்கிழமைக்கு வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம், அதுவரை அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications