குறுக்கு வழியில் மேயராவதா?: ஈரோடு மாநகராட்சியில் அதிமுக, தேமுதிக வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil


ஈரோடு: ஈரோடு மாநகராட்சியின் முதல் அவசரக் கூட்டத்தில் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியின்போது, குறுக்கு வழியில் மேயர் பதவியை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, மதிமுக, தேமுதிக கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈரோடு மாநகராட்சியின் முதல் அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மேயர் குமார் முருகேஷ் பேசுகையில் மாநகராட்சியாக ஈரோட்டை அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி
தெரிவிக்கிறேன் என்றார்.

உடனே எழுந்த அதிமுக கவுன்சிலர் ராஜா, தேர்தலை சந்தித்து தான் மேயராக வரவேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார். இப்படி குறுக்கு வழியில் மாநகராட்சியாக உயர்த்தி மேயரானது தவறு என்றார்.

இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு அவரும், அதிமுகவினரும் வெளியேறினர். இதேபோல, மதிமுக மற்றும் தேமுதிக கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது மேயர் குமார் முருகேஷ் கூறுகையில், மக்கள் மீது உங்களை விட எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது. பற்றுதலை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+