சவேரா ஹோட்டல் விபத்து: பலி 3 ஆனது-ஹோட்டல் அதிபர் கைது
சென்னை: சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நீச்சல்குளத்தின் மீது போடப்பட்ட மேடை சரிந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இன்று ஆனந்த் என்ற தகவல் தொழில்நுட்பவியல் மாணவரும், தன்யா என்ற இளம்பெண்ணும் உயிரிழந்துவிட்டனர்.
டிசம்பர் 31ம் தேதி இரவு மயிஸலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டல் வளாகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடந்தன. இதற்காக நீச்சல் குளத்தின் மீது சாதாரண கட்டைகளால் மேடை அமைக்கப்பட்டு அதில் டான்ஸ் பார்ட்டி நடந்தது.
அப்போது திடீரென மேடை சரிந்ததில், பலர் நீச்சல் குளத்தில் விழுந்தனர். இதில் நீரில் மூழ்கி உ.பியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் சுனில் அக்னிஹோத்ரி பலியானார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் மேலாளர் மைக்கல் அந்தோணி, மேடை அமைக்கும் காண்டிராக்டை பெற்ற நரேந்திர சிங்கின் மேலாளர் ரவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நரேந்திர சிங் மற்றும் ஹோட்டர் பார் பொறுப்பாளர் சம்பத் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஹோட்டல் அதிபர் பி.வி.ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரெட்டி ஜாமீனில் விடுதலையாகி விட்டார்.
மேலும் இருவர் சாவு:
இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் மாணவர் ஆனந்த் (21) இன்று மாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல் ஆனந்தின் ஒன்று விட்ட சகோதரி தன்யாவும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரெட்டி கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஆனந்த்தின் உயிர் போனது குறிப்பிடத்தக்கது.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications