Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூலி உயர்வில்லாததால் 5 லட்சம் பீடித் தொழிலாளர்கள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil


நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள பீடித் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச கூலி உயர்வை வழங்காததால் 5 லட்சம் பீடித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் தினக்கூலி அடிப்படையில் பீடி சுற்றி வருகின்றனர். மாவட்டத்தில் 50 பதிவு பெற்ற பீடி தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்களிடம் ஏஜென்டாக மாவட்டம் முழுவதும் லைசென்ஸ் பெற்ற காண்டரக்டர்கள் 1,500
பேர் உள்ளனர்.

இது தவிர டிரேட் மார்க் கம்பெனிகள் சுமார் 500 காண்ட்ராக்ட் கடைகளை நடத்தி வருகின்றன. பீடி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணய அரசாணைப்படி கடந்த 2007 ஏப்ரல் 1ம் தேதி முதல் 1000 பீடிக்கு ரூ.66.96 கூலியாக வழங்க வேண்டும். மேலும் கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் 1000 பீடிக்கு அகலவிலைப்படி உயர்வு, விடுப்புச் சம்பளம், அனைத்தும் சேர்த்து அடிப்படை ஊதியத்தில் 3 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும்.

ஆனால் பல பீடி நிறுவனங்கள் இந்த தொகையை வழங்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய 100 கோடி ரூபாய் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அரசு அறிவித்த ஊதிய உயர்வை திருச்சி, வேலூர், சென்னை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பீடி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி விட்டது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சில பீடி நிறுவனங்களின்
உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதியன்று மதுரை உயர் நீதிமன்ற பெஞ்ச் ஊதிய உயர்வு தொடர்பான அரசானையை உறுதி செய்த பின்னரும் இன்று வரை இறுதி அரசாணை பிறபிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் வருங்கால வைப்பு நிதி துறையில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் 5.5 லட்சம் பேர் இருந்தனர்.

பீடி தயாரிப்பு நிறுவனங்களை விட இடைதரகர்கள் போல் செயல்படும் காண்ட்ராக்டர்களால் பாதிக்கப்படுவதாக பீடி சுற்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இவர்களிடம் பதிவு பெறாமல் வெறும் சிட்டையில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் மட்டும் 2.5 லட்சம் பேர் உள்ளனர்.

இவர்களுக்கு பென்சன், வீடு கட்டுவதற்கான மானியம், குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, மருத்துவ வசதி, போனஸ், லீவு சம்பளம் ஆகியவை கிடைப்பதில்லை.

1000 பீடிக்கு 500 கிராம் இலைக்கு 200 கிராம் தூள் வழங்க வேண்டும். இவற்றில் தரமற்ற இலை மற்றும் தூள் காரணமாக 600 முதல் 700 பீடிகள் மட்டுமே சுற்றப்படுகின்றன. இதனால் தங்களது சொந்த பணத்தில் வெளி மார்கெட்டில் இலை, தூள் வாங்கி ஈடுகட்டுகின்றனர்.

வாரக் கடைசியில் கிடைக்கும் கூலி வெளிமார்கெட்டில் வாங்கும் இலை மற்றும் தூளுக்குதான் பயன்படுகிறது.

காண்ட்ராக்டர்களுக்கு 100 பீடிகள் கமிஷனாக வழங்க வேண்டிய நிலையில் சுற்று சரியில்லை என்று கழிக்கப்படும் பீடிக் கட்டுகளையும், கான்ட்ராக்டர்களே எடுத்து கொள்கின்றனர். தரமற்ற இலை காரணமாக பீடிகளை குறைவாக வழங்கினால் மறுநாள் வேலை தர மறுக்கின்றனர்.

பீடி தயாரிப்பு நிறுவனங்களை விட இடைத்தரகர்களாக செயல்படும் கான்ட்ராக்டர்கள் தான் அதிக பலனடைகிறார்கள். இந்த முரண்பாட்டை நீக்கக் கோரி பீடித் தொழிலாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும்
100க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இது போன்ற குறைகளை களைவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மதுரை உயர் நீதிமன்றம் உறுதி செய்த ஊதிய உயர்வை உடனடியாக பீடி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குவதற்கு தமிழக அரசு இறுதி அரசாணை பிறபிக்க வேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள பீடித் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+