'கிட்னி' குமாரின் தம்பியும் கைது!
டெல்லி: சிறுநீரக மோசடி மன்னன் டாக்டர் அமீத்குமாரின் தம்பி, டாக்டர் ஜீவன் குமார் ராவத் டெல்லியில் பிடிபட்டார்.
டெல்லி அருகே குர்கான் பகுதியில் நர்சிங் ஹோம் வைத்திருந்த டாக்டர் அமீத்குமார், 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை வெளிநாட்டினருக்கு பல கோடி அளவுக்கு விற்று மோசடி செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கில் அமீத்குமாரும், அவரது தம்பி டாக்டர் ஜீவன் குமார் ராவத்தும் முக்கிய குற்றவாளிகளாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள்.
அமீத்குமாரின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் நேபாளத்தில் பதுங்கியிருந்த அமீத்குமார் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் டெல்லி கொண்டு வரப்பட்ட அவர் தற்போது சிபிஐ வசம் விசாரணையில் உள்ளார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த டாக்டர் ஜீவன் குமாரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று அவர் டெல்லியில் வைத்து சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.
அமீத்குமாரும், ஜீவன் குமாரும் சிக்கி விட்டதால் சிறுநீரக மோசடி தொடர்பான அனைத்து விவரங்களும் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ காவலில் ஜீவன்குமார்:
பிடிபட்ட டாக்டர் ஜீவன் குமார் ராவத்தை, போலீஸார் டெல்லி முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் சஞ்சீவ் ஜெயின் முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நிறைய விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், தங்களது காவலில் அனுமதிக்குமாறு கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி பிப்ரவரி 29ம் தேதி வரை அவரை சிபிஐ தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
முன்னதாக கடந்த புதன்கிழமை ஜீவன் குமாரின் மனைவி பூஜா சிங்கால் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். குர்கான் போலீஸார் அவரைக் கைது செய்தனர். இவருக்கும் சிறுநீரக மோசடியில் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications