For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் 22 செல்போன் நிறுவனங்களுக்கு அனுமதி-கட்டணம் குறையும்

By Staff
Google Oneindia Tamil News

Cell Phones
டெல்லி: மேலும் 22 செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் அளித்துள்ளது. இதன் மூலம் செல்போன் கட்டணங்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் ஐடியா செல்லுலார் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் யுனிடெக் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு 12 வட்டங்களில் செல்போன் சேவையை மேற்கொள்ள உரிமம் கிடைத்துள்ளது.

டேட்டாகாம் நிறுவனத்திற்கு 2 வட்டங்களும், பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலாருக்கு 8 வட்டங்களும் கிடைத்துள்ளன.

யுனிடெக், ஸ்பைஸ், ஷியாம் டெலிலிங்க் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு மொத்தமாக 120 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்எம் செல்போன் சேவை பிரிவில் புதிய நிறுவனங்கள் நுழைவதால் போட்டி கடுமையாகும். இதனால் கட்டணங்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இமாலய கட்டண விகிதம் இன்று இல்லை. செல்போன் நிறுவனங்களின் பெருக்கமும், செல்போன் சேவையை பயன்படுத்துவோரின் பெருக்கமும், கட்டணத்தை இன்று மிக மிக குறைந்த அளவுக்குக் கொண்டு போய் விட்டன.

2003ம் ஆண்டு, நாடு முழுவதும் பேச நிமிடத்திற்கு ரூ.1.20 முதல் ரூ. 4.80 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது நிமிடத்திற்கு 1 ரூபாய் என்ற அளவுக்கு வந்து விட்டது.

அதேபோல, வெளிநாட்டு கட்டணமும் கூட குறைந்து விட்டது. 2003ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பேச நிமிடத்திற்கு ரூ. 9.60 வசூலிக்கபப்ட்டது. அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் நிமிடத்திற்கு ரூ. 24 வரை வசூலிக்கப்பட்டது.

ஆனால் 2006 முதல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்துக்கு நிமிடத்திற்கு ரூ. 6 வசூலிக்கப்படுகிறது. பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ. 8 ஆக கட்டணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X