இலங்கை கடத்திய 47 கன்னியாகுமரி மீனவர்கள் விடுதலை
சென்னை: இலங்கை கடற்படை கடத்திச் சென்ற 62 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில் 47 பேரை அந்த நாடு விடுவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களில் 47 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், சின்னத்துறை கிராமங்களைச் சேர்ந்த 62 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று விட்டது. அவர்களை தற்போது புத்தளம் தீவில் உள்ள சிறையில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசைக் கண்டிக்கவும் அவர் கோரியிருந்தார். இந்தப் பின்னணியில், 47 மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் மற்ற மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை அரசு வாய் திறக்கவில்லை.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications