ஆசிரியைக்கு செக்ஸ் தொல்லை-ஆசிரியர் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி பள்ளியில் ஆசிரியையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த சக ஆசிரியர் மீது கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.

தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் செல்வ விநாயகம். இவர் விகேபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. தூத்துக்குடி சத்திரம் தெருவில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

தூத்துக்குடி ராஜாமன்னார் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ். இவர் சந்திரா வேலை பார்க்கும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். ஆசிரியர் சுந்தர்ராஜ் சந்திராவிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சந்திரா பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தார். ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த ஜனவரி 30ம் தேதி சந்திராவை வழிமறித்து சுந்தர்ராஜ் மிரட்டியுள்ளார். பள்ளி நிர்வாகமும் சுந்தர்ராஜூக்கு ஆதரவாக செயல்பட்டதால் வேறு வழியின்றி சந்திரா கடந்த 5-2-08ல் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆனால் போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் எஸ்பி, டிஐஜியிடம் புகார் கொடுத்தார். அங்கும் சரிவர நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்ைத நாடினார் சந்திரா.

மனுவை விசாரித்த நீதிபதி சசிரேகா ஆசிரியர் சுந்தர்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கோர்ட் சொன்ன பிறகே உரைத்துள்ளது மகளிர் போலீஸாருக்கு. இதையடுத்து வேகம் வேகமாக சுந்தரராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். ஆனால் சுந்தரராஜோ அழகாக எஸ்கேப் ஆகி விட்டார். இப்போது அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+