குணமடைந்து வீடு திரும்பினார் கி.வீரமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு, ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, குணமடைந்து வீடு திரும்பினார்.
2 நாட்களுக்கு முன்பு கி.வீரமணிக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு அவர் வீடு திரும்பினார். அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அடுத்த ஒரு வாரத்திற்கு வீரமணியைப் பார்க்க வர வேண்டாம் என தி.க. தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications