ரவுடி பங்க் குமாரை கொன்ற போலீசுக்கு விருது
சென்னை: ரவுடி பங்க் குமாரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற தனிப்படை போலீசாருக்கு வீர தீரச் செயலுக்கான முதல்வர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலாளர் மாலதி வெளியிட்ட அரசாணை விவரம்:
கொலை, ஆள் கடத்துதல், கற்பழிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் அசோக்குமார் (எ) பங்க் குமார். அவரை கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியன்று நடந்த என்கவுன்டரில் இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் தலைமையிலான தனிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த போலீஸ் படையினருக்கு வீர தீர செயலுக்கான தமிழ்நாடு முதல்வர் விருது வழங்க வேண்டும் என்று டிஜிபி பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்று விருதுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், எஸ்ஐக்கள் மோகன்ராஜ், பூமாறன், ரவிக்குமார், அருள்மணி மற்றும் தலைமைக் காவலர்கள் தேவராஜ குமரேசன் (வில்லிவாக்கம்),
வின்சென்ட் (எம்.ஜி.ஆர்.நகர்), பீட்டர் (எம்.ஜி.ஆர்.நகர்) ஆகிய 8 பேருக்கும் விருது வழங்கப்படுகிறது. 12.12.06 முன்தேதியிட்டு, மாதப்படியாக ரூ.100ம் இவர்களுக்கு வழங்கப்படும்.
சென்னையில் இதற்கான விழாவில் முதல்வர் கருணாநிதி அந்த விருதுகளை வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications