சங்கரராமன் கொலை வழக்கு-ஜூன் 6க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 16 பேர் கோர்ட்டுக்கு வரவில்லை.
அவர்கள் வராததற்கான காரணத்தை விளக்கி அவர்களுடைய வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதைக் காரணம் காட்டி ஜூன் 6ம் தேதிக்கு வழக்கை நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications