அரசுத் துறைகளின் செயல்பாடு - நாளை முதல் கருணாநிதி ஆய்வு

முதுகு வலி மற்றும் கழுத்து வலி காரணமாக ஒரு வாரத்திற்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தியுள்ளபோதிலும் அதை பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதி தனது பணிகளில் வழக்கம் போலவே ஈடுபட்டு வருகிறார்.
நாளை முதல் அவர் தினசரி ஒரு துறையின் செயலாளருடன், அத்துறை குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தவுள்ளார். மாலையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
முதல் நாளான நாளை உணவு மற்றும் கூட்டுறவுத்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அத்துறைச் அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
23ம் தேதி நகராட்சி நிர்வாகம், 24ம் தேதி சுகாதாரத் துறை, 25ம் தேதி காவல், 27ம் தேதி வருவாய், 28ம் தேதி பொதுப்பணித்துறை, 29ம் தேதி வேளாண்மைத் துறை, 30ம் தேதி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications