சென்னை-உரிமை கோராத 36 சடலங்கள் அடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரயில் தண்டவாளங்களில் இறந்து கிடந்த 36 பேரின் உரிமை கோரப்படாத சடலங்களை ஒரு தொண்டு நிறுவனம் அடக்கம் செய்தது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டும், ரயிலில் செல்லும்போது தவறி விழுந்தும் பலர் இறக்கின்றனர்.
இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனை சவக் கிடங்குக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதுபோல கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 36 சடலங்கள் வந்தன. ஆனால், இதில் பெரும்பாலானவை அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்களைக் கோரியும் யாரும் வரவி்ல்லை.
இதையடுத்து அவற்றை அடக்கம் செய்வதற்காக, சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம், நேற்று சவக்கிடங்கில் இருந்து இந்த உடல்களை எடுத்துச் சென்றது.












Click it and Unblock the Notifications