For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி சுடுகாட்டில் குழந்தை பெற்ற பெண்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:புதுக்கோட்டை அருகே சுடுகாட்டில் ஒரு பெண் குழந்தைப் பெற்றெடுத்தார்.

பீகார் மாநிலம் தார்கர் பகுதியை சேர்ந்தவர் முன்னா. இவரது மனைவி சமீலா. ஐந்து மாதங்களுக்கு முன்பு சமீலா தனது குடும்பத்தைப் பிரிந்து தமிழ்நாட்டிற்கு வந்து விட்டார்.

கடந்த 18ம் தேதி மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு லாரியில் ஏறி படுத்துக் கொண்டார். லாரி புதுக்கோட்டை அருகே வந்தபோதுதான் இதனை கவனித்தனர் டிரைவர் மற்றும் கிளினர் இருவரும். உடனே சமீலாவை அங்கேயே இறக்கி விட்டு விட்டனர். பிரவச வலி ஏற்பட்டதும் சமீலா யூனியன் அலுவலகம் அருகில் இருந்த சுடுகாட்டில் மயங்கி சரிந்தார்

இந்நிலையில் காலையில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனை சுடுகாட்டுக்கு அருகில் வல்கனைசிங் கடை வைத்துள்ள விஜய் என்பவர் கவனித்து புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

மகளிர் போலீசார் அங்கு சென்று பச்சிளம் குழந்தையையும், தாய் சமீலாவையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். தானே ஆதரவற்ற நிலையில் இருப்பதால் தனக்கு குழந்தை தேவையில்லை என தெரிவித்து விட்டார் சமீலா. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் காணப்படுகிறார்.

இதனால் அந்த குழந்தை அரசின் தொட்டில் குழந்தை தி்ட்டத்தில் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X