புது சட்டசபை 'ராசி'யால் கவிழ்ந்ததா ஆசாத் அரசு?
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில புதிய சட்டசபை வளாகம் குலாம் நபி ஆசாத் அரசுக்கு ராசியில்லாமல் போனதால்தான் அவரது ஆட்சி கவிழ்ந்து விட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் புதிய கட்டட வளாகம் நேற்று முன்தினம்தான் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று நடக்கவிருந்த நம்பிக்ைக வாக்கெடுப்புக்கு முன்னதாக ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார், அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசும் கவிழந்து விட்டது.
ஆசாத் கவிழ்ந்ததற்கு சட்டசபை புதிய வளாகம் ராசியில்லாமல் போனதுதான் காரணம் என கதை கிளப்பி விட்டுள்ளனர். புதிய சட்டசபை வளாகம் சென்டிமென்ட்டாக சரியில்லை. இதனால்தான் புதிய சட்டசபையில் நடந்த முதல் கூட்டத்திலேயே ஆசாத் அரசு கவிழ்ந்து விட்டதாக கூறுகிறார்கள்.
ஆதரவுக்கு 'ஆள்' கிடைக்காததற்கு 'அசெம்பிளி' என்ன பாவம் செய்தது?












Click it and Unblock the Notifications