கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர் நிர்வாண நிலையில் கொலை!
அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல துறை அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் பொதுப்பணித்துறை மின் பிரிவு அலுவலகம் உள்ளது.
இங்கு குணசேகரன் என்ற மின் ஊழியர் பணியாற்றி வந்தார். பணி முடிந்து அலுவலகத்திலேயே தங்குவது வழக்கம்.
வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்த மற்ற ஊழியர்கள் மின் பிரிவு அலுவலகத்தில் உள்ள கழிவறையில் குணசேகரன் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிதோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குணசேகரனின் தலையின் பின்பக்கத்தில் யாரோ உருட்டுக்கடையால் தாக்கி கொலை செய்துள்ளனர். அதனால் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உடலை கழிவறை வரை இழுத்துச் சென்று போட்டுள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டுபடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications