For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலத்தில் ராஜபக்சே கொடும்பாவிக்கு 'தூக்கு'!

By Staff
Google Oneindia Tamil News

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு மர்ம நபர்கள் தூக்கு மாட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையைக் கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.

இந்த நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை மர்ம நபர்கள் தூக்கில் தொங்க விட்டிருந்தனர். பொம்மையின் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டும் இருந்தது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த உருவ பொம்மையை அந்த இடத்தில் இருந்து அகற்றினர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X