வேலூர் மாநகராட்சி இன்று உதயம்-கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
வேலூர்: தமிழகத்தின் 9வது மாநகராட்சியாக இன்று வேலூர் மாநகராட்சி உதயமாகிறது. முதல்வர் கருணாநிதி இன்று வேலூர் மாநகராட்சியை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. சமீபத்தில் ஈரோடும், திருப்பூரும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.
அடுத்து வேலூரும், தூத்துக்குடியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில் வேலூர் மாநகராட்சி இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்படுகிறது.
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. வேலூர் மாநகராட்சியைத் தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார்.
வேலூர் மாநகராட்சியில், வேலூர், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை ஆகிய நான்கு நகராட்சிகளும், சத்துவாச்சாரி, தாராபடவேடு, மேல்விஷாரம் ஆகிய 3ம் நிலை நகராட்சிகளும், 8 பேரூராட்சிகள், 61 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 9 லட்சத்து 7 ஆயிரமாக இருக்கும்.
மாநகராட்சி தொடக்க விழாவையொட்டி வேலூர் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. வேலூர் முழுவதும் கட் அவுட்கள், தட்டிகள், பேனர்கள் என ஜெகஜோதியாக உள்ளது. மின் விளக்கு அலங்காரங்களும் கண்களைப் பறிக்கின்றன. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications