ராஜஸ்தான்-மலைக்கோவில் படிக்கட்டுகள் சரிந்து 3 பேர் பலி, இடிபாடுகளில் 250 பேர்

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் சம்பல் பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற மகாதேவ் குகைக் கோவில் உள்ளது. வார விடுமுறை என்பதால் இந்த கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் சென்றனர். அப்போது திடீரென்று படிக்கட்டுகள் சரிந்து விழுந்தன. இதில் 3 பக்தர்கள் பரிதாபமாக பலியாயினர்.
250க்கும் மேற்பட்ட பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பாறைகளை பிடித்து தொங்கியபடி பலர் காப்பாற்றும்படி கதறினர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ள பக்தர்களை காப்பாற்ற ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டுகள் சரிந்து விழுந்தபோது 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் நிலை குறித்தும் இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து கோடா மாவட்ட கலெக்டர் அபே குமார் கூறுகையில், கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. நேற்று அதிகளவலான பக்தர்கள் வந்துள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது என்றார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications