மழை, வெள்ளம்-பஞ்சாபில் 150 கிராமங்கள் மூழ்கின
டெல்லி: பஞ்சாபில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதமடைநதுள்ளன. மீட்பு பணிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் உள்பட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை பஞ்சாபை அதிகம் பாதித்துள்ளது. அதிக நீர் வரத்துக் காரணமாக பஞ்சாபின் பக்ரானங்கள் அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து நீர் வேகமாக வெளியேற்றப்பட்டது. சட்லஜ் நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு பஞ்சாபில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
அமிர்தசரஸ், டார்ன்டரன், பெரோஸ்பூர், குர்தாஸ்பூர், கபுர்தலா, ஜலந்தர், மோகா மற்றும் ஹோஷியர்பூர் உள்பட 10 மாவட்டங்கள் மோசமாக பாதித்துள்ளது. 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களாக அங்கு கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
நள்ளிரவில் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் செய்தவதறியாது திகைத்துள்ளனர். சாப்பாடு, தூக்கம் இன்றி தண்ணீரிலேயே குழந்தைகளுடன் மக்கள் தத்தளித்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான பயிர் நிலங்களும் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. மீட்பு பணி நடந்து வருகிற போதிலும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளை வழங்குவது கடினமாக உள்ளது.
இதையடுத்து மீட்புப் பணிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 250 குடும்பங்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், இந்த மழை மற்றும் வெள்ளத்தால் வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை போன்ற அடிப்படை கட்டமைப்புகள் சேதமாகியுள்ளன. பஞ்சாபில் உள்ள நீர் ஆதார கட்டமைப்புகள் மிகவும் நலிவாக உள்ளன.
இதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நீர்வளத்துறை அமைச்சர் சைபுதின்சோஸ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நீர்வளத்தை பலப்படுத்தவும், மறுவாழ்வை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன் என்று கூறினார்.
சினிமா பார்த்த முதல்வர்:
இதற்கிடையில் ஜலந்தரில் திரையிடப்பட்ட சிங் இஸ் கிங்ஸ் என்ற பாலிவுட் படத்தை பார்க்க சென்றார் பாதல். 'படம் பார்த்து 10-15 வருடங்கள் ஆகிறது. இந்த படத்தை வீடியோவிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் இருந்தேன். ஜலந்தரில் திரையிடப்பட்டுள்ளதால் பார்க்க வந்தேன்' என்று கூறினார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications